Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யாஸ் புயல் பாதிப்பு - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு

மே 28, 2021 10:55

புதுடெல்லி: வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே பகானகா அருகில் நேற்று முன்தினம் கரை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. பலத்த மழையும் கொட்டித்தீர்த்தது.

இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம்
அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.
 

தலைப்புச்செய்திகள்